Friday, January 6, 2012

வாத்தியார் பொண்ணுக்கு கலியாணமாம்!!

முன்குறிப்பு : இந்த சிறுகதை நான் பதினோராம் தரம் படிக்கும்போது ஒரு சிறுகதை போட்டிக்காக "வறுமையின் கோடுகள்” எனும் தலைப்பில் எழுதியது. அதிலும் காமடி என்னென்றா அந்த போட்டியில நான் மட்டும்தான் பங்குபற்றியிருக்கிறன் போல.... ஏனென்றா இந்த கதைக்குத்தான் மாவட்ட மட்டத்தில் முதலிடம்.. ஹி ஹி. பழைய பெட்டிகளை தட்டும்போது கிடைத்தது.. அப்பிடியே பதிவிட்டுட்டேன்........ 
---------------------------------------------------------------------------------------------------------------------
இன்று வழக்கின் இறுதி நாள். சுந்தரம்பிள்ளை மாஸ்டருக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. குற்றவாளிக்கூண்டு அவருடைய நாற்பது வருடகால ஆசிரியப்பணியின் செல்வாக்கை, கௌரவத்தை விழுங்கிக்கொண்டிருந்தது. “குற்றம் நிரூபிக்கப்பட்டிருக்கும் நிலையில் உங்களுக்கு ஒரு சந்தர்ப்பம் வழங்கப்படுகிறது மிஸ்டர் சுந்தரம்பிள்ளை. உங்கள் சார்பில் வாதாட யாரும் வக்கீல் உள்ளார்களா?

நீதிபதியின் ஒவ்வொரு சொற்களும் ஒவ்வொரு ஈட்டியாக அவரது காதுகளில் நுழைந்தது. பாவம்... அவர் என்ன செய்வார்! செய்யாத குற்றத்திற்காக அவர் தண்டனை அனுபவிக்கப்போகிறார். அவர் மனம் அவர் குடும்பத்தினரை எண்ணி கலங்கியது.  அவருடைய சிறு வருமானத்தை மட்டுமே நம்பி, சிறு வயதிலேயே தாயை இழந்த திருமண வயதை அடைந்த மூன்று பெண்பிள்ளைகள் .... நினைக்க நினைக்க சுந்தரம்பிள்ளை மாஸ்டருக்கு தலை சுற்றியது. “என் சார்பில் வாதாட யாரும்.......” சொல்ல வாயெடுத்தார் மாஸ்டர்..